• Download mobile app
15 Jan 2026, ThursdayEdition - 3627
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர்

February 20, 2017 தண்டோரா குழு

பத்தாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இப்போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் தமிழக வீரர் டி. நடராஜனை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 3 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவரது அடிப்படை விலை ரூ.10 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து 30 மடங்கு அதிக தொகைக்கு அவர் தற்போது வாங்கப்பட்டிருக்கிறார்.

இதே போல் கவுதம், அனிகட் சவுத்ரி, கரண் சர்மா, டைமல் மில்ஸ் போன்ற வீரர்களும் அடிப்படை விலையை விட பல மடங்கு அதிகமாக ஏலம் போனது குறிப்படத்தக்கது.

மேலும் படிக்க