• Download mobile app
11 Jun 2026, ThursdayEdition - 3774
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ.நா.சபையில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

April 15, 2016 வெங்கி சதீஷ்

இந்தியாவின் சட்ட மேதை பாபா சாகேப் அம்பேத்கரின் 125வது பிறந்த விழா முதல் முறையாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டாப்பட்டது.

அமெரிக்க, நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமை அலுவலகத்தில், அம்பேத்கரின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டப்பட்டது. இந்த விழாவில், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க், ஒருவரை சமமாக மதிக்காமலிருப்பது ஒரு நாட்டிற்கு பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும், அம்பேத்கரின் சிந்தனைகள் எல்லா காலத்திற்கும் ஏற்புடையதாகவே உள்ளது. இதனால் ஐநாவின் வளர்ச்சிக்கு அம்பேத்கரின் கோட்பாடுகள் மிகவும் உதவும் என்றார். அதை போல், இந்தியாவுடன் ஐநா சபை நல்ல நட்புடன் இருப்பதாகவும், அதனை தொடர விரும்பவதாகவும் கூறிய அவர், அம்பேத்கரின் கோட்பாடுகள் ஐநாவின் 2030 இலக்கை அடைய உதவும் எனவும் கூறியுள்ளார்.
சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதன் மூலமாக, நிலையான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என்ற 2030ம் ஆண்டுக்குள் ஐ.நா.சபை இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காகப் பாடுபட்ட அம்பேத்கரை, சர்வதேச தலைவர்களில் ஒருவராக கவுரவித்து அம்பேதகரின் பிறந்தநாளை ஐநா முதல் முறையாக கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க