• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐபில் போட்டிகள் போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் ஒத்திவைக்கப்படுமா.. ?-உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

April 18, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகிறது.இதனால் தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்த கூடாது என தமிழ் அமைப்புகள், திரைத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து,சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையில்,பேச்சுவார்த்தையில் கடந்த ஒன்றரை மாதமாக நீடித்த சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வருகிறது.இதனால் படப்பிடிப்பு மற்றும் புதிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

இந்நிலையில்,ஐபில் போட்டிகள் போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா.. ? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே’என நடிகர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் படிக்க