• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐந்து நாட்களுக்குள் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படும் – முதலமைச்சர்

February 24, 2017 தண்டோரா குழு

கோவையில் உள்ள ஈஷா மையத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 112 அடியில் அமைக்கப்பட்டுள்ள சிவன் சிலையை வெள்ளிக்கிழமை மாலையில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி கோவை வந்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:

ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் மோனோ ரயில் திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் அத்திக்கடவு அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும்.ரூ.120 கோடியில் வெள்ளகோவில் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

ரூ. 300 கோடி செலவில் கோவை அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும். ஐந்து நாட்களுக்குள் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படும்.“நீட்” விவகாரம் தொடர்பாக வரும் 27-ஆம் தேதி பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச இருக்கிறேன்”.

இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

மேலும் படிக்க