• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐஐடியில் மாணவர் சேர்க்கை, கலந்தாய்வுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

July 7, 2017 தண்டோரா குழு

சென்னை ஐஐடி உள்பட நாடு முழுவதும் உள்ள ஐஐடியில் மாணவர் சேர்க்கை மற்றும் மாணவர் கலந்தாய்வுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐஐடி நுழைவுத்தேர்வில் இந்தி வினாத்தாளில் ஒரு கேள்வி தவறாக கேட்கப்பட்டிருந்தது. எழுத்துப்பிழை உள்ளிட்ட காரணங்களால் அக்கேள்வி தவறானதாக கருதப்பட்டது. இதற்காக, அக்கேள்விக்கு பதில் அளித்த அனைத்து மாணவர்களுக்கும் சலுகை மதிப்பெண் வழங்கப்படுவதாக ஐஐடி நிர்வாகம் அறிவித்தது.

இதனையடுத்து, சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதை எதிர்த்து தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உள்ளிட்ட, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து ஐஐடியில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க