• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏ.ஜே.கே கல்லூரியில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய மகாபலி சர்க்கரவர்த்தி !

September 13, 2024 தண்டோரா குழு

கோவை அருகே உள்ளநவக்கரை ஏஜேகே கலை அறிவியல் கல்லூரியில் இன்று (வெள்ளிக்கிழமை) ஓணம் பண்டிகை விழாமாணவ மாணவிகளால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதை ஒட்டி கல்லூரி வளாகம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பூக்கோலங்கள் அனைவரதுகண்ணை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஓணம் கூத்து என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த ஓணம் பண்டிகையில் சிறப்பு நிகழ்ச்சியாக மகாபலி சக்கரவர்த்தி போல் வேடம் அணிந்தவரை நபரை ஹெலிகாப்டரில் செண்டை மேளம் முழங்க அழைத்து வரப்பட்டார் அப்போது மாணவ மாணவிகள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

முன்னதாக நடைபெற்ற விழாவில் ஏ.ஜே.கே கல்லூரி செயலாளர் அஜித் குமார் லால், இயக்குனர் பேராசியர் பிந்து அஜித் குமார் லால் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அதைத்தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் படிக்க