• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வழங்கினார் ஜனாதிபதி

May 3, 2018 தண்டோரா குழு

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வழங்கினார்.

2017ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 13ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இதையடுத்து 65-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில்,11 பேருக்கு மட்டும் தேசிய விருதுகளை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய விருது வழங்கினார்.மீதமுள்ளவர்களுக்கு, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரதோர் விருதுகளை வழங்கினர்.குடியரசுத்தலைவர் கையால் விருது வழங்காததால் 68 பேர் விழாவை புறக்கணித்தனர்.

இந்நிலையில்,சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்திற்கும், மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடித்த மாம் திரைப்படத்திற்காகாவும் ஏ.ஆர்.ரகுமான் இரண்டு தேசிய விருதுகளை பெற்றார்.

மேலும் படிக்க