• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏற்கனவே கொரோனா பாதித்தவர்கள் வெள்ளிங்கிரி மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும்

March 1, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் சிவராத்திரியினை முன்னிட்டு வெள்ளிங்கிரி திருக்கோயில், பட்டீஸ்வரர் திருக்கோயில்,கோட்டை ஈஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பொது மக்கள் வழிபாட்டிற்கு சிறப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது நிலவி வரும் சூழ்நிலையினை கருத்திற் கொண்டும், பொது மக்கள் நலனை கருத்திற்கொண்டும், ஏற்கனவே கொரோனா பாதித்தவர்கள்,குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் ஆகியோர்கள் மலை ஏறுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் அரசால் விதிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் பின்பற்றி வழிபாட்டுத்தலங்களில் கூட்டமாக தரிசனத்திற்கு கூடுவதை தவிர்க்குமாறும்முகக்கவசம் அணிவதை கட்டாயமாக கடைபிடிக்குமாறும் கேட்டுக்
கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க