• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன – பிரதமர் மோடி

April 8, 2020 தண்டோரா குழு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5000யைத் கடந்துள்ள நிலையில், ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கை திரும்பப் பெறும் முடிவு இல்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக இன்று உரையாடினார்.

அப்போது பேசிய அவர்,

கொரோனா எதிரொலியாக, உலக நாடுகள் கடும் சவாலை எதிர்கொண்டுள்ளது.இந்த சவாலை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும். நாட்டில் ஒவ்வொருவரின் உயிரும் அரசுக்கு முக்கியம். இந்தியாவிலும் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டாம். இரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மாநில அரசுகளும், வல்லுநர்களும் பரிந்துரைத்துள்ளனர்.எனவே ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கை திரும்பப் பெறும் முடிவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் ஏப்ரல் இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
காணொளி காட்சி மூலமாக நடந்த இந்த உரையாடலில் காங்கிரஸின் குலாம் நபி ஆசாத், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சுதீப் பாண்டியோ பாத்யாய், சிவசேனாவின் சஞ்சய் ராவத், பிஜேடியின் பினாக்கி மிஸ்ரா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், சமாஜ்வாதி கட்சியின் மிதுன் ரெட்டி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பிரதமரிடம் பேசினர்.

மேலும் படிக்க