• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் கூடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் உட்பட 500 பேர் மீது வழக்கு பதிவு !

August 11, 2021 தண்டோரா குழு

லஞ்சம் ஒழிப்பு துறையின் சோதனையின் போது அனுமதியின்றி கூட்டம் கூடிய 10 சட்டமன்ற உறுப்பினர் உட்பட 500 பேர் மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டடுள்ளது.

கோவை சுகுணாபுரம் பகுதியில்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறையினர் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அவருக்கு ஆதரவாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டம் கூடினர்.

இந்நிலையில்,சோதனை நடத்திய போது வீட்டின் முன்பு கூட்டமாக கூடியதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ஜுனன், கிணத்துக்கடவு தாமோதரன் உட்பட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க