• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் ரூ.32.98 லட்சம் பறிமுதல் !

September 13, 2022 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 3வது முறையாக
இன்று காலை முதல் மாலை வரை
சோதனையில் ஈடுபட்டனர்.

இதனால் அதிமுக தொண்டர்கள் மற்றும் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். இதனைத் தொடர்ந்து
எஸ்.பி வேலுமணி வீட்டின் முன்பு திரண்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் ரூ. 32.08 லட்சம் ரொக்கம், 1,228 கிராம் தங்கம், 348 கிராம் வெள்ளி மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்களும் கண்டறியப்பட்டன. வழக்கில் தொடர்புடைய 315 ஆவணங்கள், 2 வங்கி பெட்டக சாவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க