• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர்

February 1, 2018

கோவையில் காவல் நிலைய மரணத்திற்கு நீதி கேட்டு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த மாதம் 22 ஆம் தேதி வழிப்பறியில் ஈடுபட்டதாக பொதுமக்கள் பிடித்து சாகுல் ஹமீது மற்றும் சையது இப்ராகிம் ஆகிய இருவரையும் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொதுமக்கள் இவர்களை பிடிக்கும் போது வண்டியில் இருந்து கீழே விழுந்ததில் சாகுல் ஹமீது காயமடைந்துள்ளார். லேசான காயங்களுடன் காவல்நிலையம் அழைத்து சென்று சாகுல் ஹமீதை காவலர்கள் கடுமையாக தாக்கியதால் கோமா நிலைக்கு செல்லப்பட்டார்.

இந்நிலையில் சாகுல் ஹமீது என்பவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து லேசான காயங்களுடன் காவல் நிலையம் சென்ற சாகுல் ஹமீதை காவலர்கள் கடுமையாக தாக்கியதில் தான் உயிரிழந்துள்ளார் என்றும் , மேட்டுப்பாளையம் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் இன்று காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு  அளித்தனர்.

மேலும் படிக்க