• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ்.பி.ஐ வங்கியின் அறிவிப்பை மறுபரிசிலனை செய்ய மத்திய அரசு உத்தரவு

March 7, 2017 தண்டோரா குழு

பணம் செலுத்துவதற்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற முடிவைக் கைவிட வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சேமிப்பு கணக்கில் குறைந்த பட்சம் ரூபாய் 5 ஆயிரம் இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருக்காமல் உள்ளவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்திருந்தது.

அத்துடன், நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுடைய வங்கி கணக்கில் ரூபாய் 3 ஆயிரமும், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் ரூபாய் ஆயிரமும், புறநகர் பகுதியில் வசிப்பவர்கள் ரூபாய் 2 ஆயிரமும் சேமிப்புக் கணக்கில் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிக்கை விடுத்திருந்தது.

இதனால் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த அறிவிப்பு மக்களிடம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. மேலும், அதில் சேமிப்பு வைத்திருக்கும் சுமார் 31 கோடி பேருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதையடுத்து, இந்த திட்டத்தை குறித்து ஸ்டேட் பேங்க் மறுபரிசிலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க