May 23, 2018
தண்டோரா குழு
அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவரான பிலிப் ரோத் நேற்று இயற்கை எய்தினார்.
அமெரிக்காவின் முக்கிய எழுத்தாளரான ரோத் நேற்று இதய செயலலிழப்பு காரணமாக இறந்தார். பிலிப் மில்டன் ரோத் மார்ச் 19, 1933ஆம் ஆண்டு நியு யார்க் நகரில் உள்ள நியூ ஜெர்ஸியில் பிறந்தார். 1956 இல் மார்கரெட் மார்டின்ஸனைச் என்கின்ற பெண்ணை சந்தித்து 1959 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். 1963 ஆம் ஆண்டில் அவரது மனைவி மார்டின்சன் ஒரு கார் விபத்தில் இறந்துபோனார்.
ரோத் 1959ஆம் ஆண்டில் குட் பாய் கொலம்பஸ் என்ற சிறுகதைக்காக நேஷனல் புக் விருதும், ஃபிக்ஷன் என்கின்ற விருதும் பெற்றார்.
இவர் எழுதிய பாலியல் தொடர்பான நாவல் அவரை அமெரிக்காவில் பிரபலமாக்கியது. அதன் பின் பல புகழ்பெற்ற வரலாற்று நாவல்களை எழுதினார். இவர் 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டில் இனி எந்த தொலைக்காட்சியிலும் நான் தோற்றம் அளிக்க மாட்டேன் இதுவே கடைசியாக இருக்கும் என்று கூறினார்.இந்நிலையில் நேற்று அவர் இதய செயலலிழப்பு காரணமாக இயற்கை எய்தினார்