• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சரை சந்திக்க உள்ளளோம் – சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன்

March 9, 2018 தண்டோரா குழு

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக , வருகிற 13 ஆம் தேதி தமிழக சுகாதார துறை அமைச்சருடன் சென்று மத்திய சுகாதார துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை அரசு மருத்துமனையில் 30 கோடி ரூபாய் வரை தமிழக அரசின் சுகாதார துறை சார்பில் இருதிய துறை சிறுநீரகவியல், நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு கருவிகள், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஒதுக்கபட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

உயர்தர மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது, பைப் லைன் கேத்லேப் மிக விரைவில நிறுவப்படும்.   ஜைக்கா திட்டத்தின் மூலம் 189 கோடி ரூபாயில் 79 வகையான இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் தொற்றா நோய் தாக்கம் அதிகரித்துள்ளது இதற்காக புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு துறை ஓர் இரு மாதங்களில் கொண்டு வரப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர 700 ஏக்கர் கைவசம் உள்ள தமிழகத்தில் ஐந்து இடங்கள் உள்ளது என ஏற்கெனவே கூறப்பட்டது.  மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக கேட்டு இருந்த அனைத்து தகவல்களும் வழங்கப்பட்டதாகவும் எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கூறினார்.

குறிப்பாக தமிழக சுகாதார துறை அமைச்சர் மற்றும் தானும் வரும் 13 ஆம் தேதி மத்திய சுகாதார துறை அமைச்சரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து சந்திக்க உள்ளதாகவும்  தமிழக அரசு எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தாமதம் காட்டி வருவதாக கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்றும் அவர் கூறினார்.

மேலும்,  அனைத்து மாவட்டங்களிலும் எம் ஆர் ஐ வசதி கொண்டு வர உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும்  தாய் சேய் நலத்தில் வளர்ந்த நாடுகளுக்கு இணையான வசதிகளை செய்து உள்ளதாகவும் லஞ்ச புகார்கள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையின் டீன் அல்லது ஆர்எம்ஓ விடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் 104 எண்ணிற்கு மருத்துவமனையில் உள்ள குறைகள் தொடர்பாக புகார் அளிக்கலாம் எனவும் கூறினார்.

மேலும், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கோடை கால நோய்கள் குறித்து விழிப்புணர்வாக இருக்க அனைத்து சுகாதாரத்துறையிடம் உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.

மேலும் படிக்க