June 11, 2018
தண்டோரா குழு
உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாஜ்பாயை பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்தார்
இந்தியாவின் 10-வது பிரதமராக பதவி வகித்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். தற்போது, உடல் நலக்குறைவால் அரசியலில் இருந்து விலகி டெல்லி கிருஷ்ணா மார்க் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவர் வீட்டில் இருந்தபடியே மருத்துவ சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் அவர் இன்று திடீரென டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இது வழக்கமான சோதனை தான் என்றும், வாஜ்பாயின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் வாஜ்பாயை பிரதமர் நரேந்திர நேரில் நலம் விசாரித்தார். அவருடன் பா.ஜ.க தலைவர் அமித்ஷா மற்றும் பா.ஜ. மூத்த நிர்வாகிகள் சென்றனர்.