• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்ல பிரதர் ! இது தமிழில் ஆனால் இந்தியில் வேறு வசனம்

June 11, 2018 தண்டோரா குழு

கமல்ஹாசன் இயக்கத்தில் 2013ம் ஆண்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் விஸ்வரூபம். இதன் இரண்டாவது பாகமும் தயாராகி வந்தது.

இதுமட்டுமின்றி முதல் பாகத்தை எடுக்கும் போதே இரண்டாவது பாகத்துக்கான 40 சதவிகித படப்பிடிப்பை கமல் முடித்துவிட்டார் என சொல்லப்பட்டது. ஆனாலும் இன்னும் படத்தின் வெளியீடு பற்றி எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. இதனைத்தொடர்ந்து, அண்மையில் படத்தின் புதிய போஸ்டர் மட்டும் வெளிவந்தது. இதற்கிடையில்,’எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்ல பிரதர் தேச துரோகியாக இருக்க கூடாது என்ற கமல் வசனத்துடன் விஸ்வரூபம் 2 படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. தமிழ் ட்ரைலரை ஸ்ருதிஹசனும், இந்தி ட்ரைலரை அமீர்கானும் தெலுங்கு ட்ரைலரை ஜூனியர் என்.டி ஆரும் வெளியிட்டனர். இதனை கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு,இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் டிரெய்லர் வெளியானாலும் அதில் ஒரு வசனம் மட்டும் மாறியுள்ளது. அதாவது, தமிழில் ‘எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்ல பிரதர் ஆனால் தேச துரோகியாக இருக்க கூடாது என்ற கமல் வசனம் இடம் பெற்றுள்ளது. தெலுங்கிலும் இதே வசனம் தான் இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்தியில் மட்டும் சற்று மாற்றப்பட்டுள்ளது.

அதில், ‘எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்ல பிரதர் ஆனால் தேச துரோகியாக இருக்க கூடாது என்ற வசனத்திற்கு பதில் “முசல்மான இருப்பது தவறவில்லை, ஆனா உங்கள மாதிரி மனுஷனா இருப்பதுதான் ஹ்ராம்” என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இதனால், தற்போது ஏன் இந்த மாற்றம் என நெட்டிசன் கேள்வி எழுப்பி வருகின்றனர். விஸ்வரூபம் படம் தமிழில் வெளியாக கூடாது என தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க