• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எதிர்கட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க முயற்சிக்கிறது – அமைச்சர் செந்தில் பாலாஜி.

February 21, 2022 தண்டோரா குழு

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் ஆடிட்டோரியத்தில் கோவை மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.இதில் நாளைய தினம் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை குறித்தான ஆலோசனைகளை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் எதிர்கட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சிப்பதாகவும் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். எதிர்கட்சிகள் கலவரம் செய்தால் நாம் பொறுமையாக இருக்க கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த தேர்தலில் அனைத்து இடங்களில் திமுக வெற்றி பெறும். எதிர்கட்சி நிர்வாகிகள் வாக்கு பதிவு மையங்களிக்குள் சென்றுள்ளனர் என்றும் சட்டமன்ற உறுப்பினர் எந்த அடையாள அட்டையை வைத்து சென்றனர். அவர்கள் வாக்குசாவடிக்குள் செல்ல யார் அனுமதி கொடுத்தது? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் வாக்கு எண்ணிக்கை மையய்திற்கு ஆயிரக்கணக்கான நபர்களை கொண்டு வன்முறையை தூண்ட முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தேவையான பாதுகாப்பு உள்ளதாகவும் கூறினார். எதிர்கட்சி போடுகின்ற கூட்டம் ரசியமாகவே நடைபெறுவதாகவும் தெரித்தார்.கோவை மாவட்டத்தில் பூத் சிலிப் வழங்க பல்வேறு சிரமங்கள் இருந்ததாக கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர்,வாக்காளர்களின் முகவரி மாற்றங்களில் சில பிரச்சினைகள் இருந்ததால் பூத் சிலிப் தருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தார். தேர்தலின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குசாவடிக்குள் சென்றது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் நாளை வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற வேண்டும் என கூறினார்.

இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

மேலும் படிக்க