• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

எண்ணூர் துறைமுகத்தில் விபத்தை ஏற்படுத்திய கப்பல் மீது வழக்குப்பதிவு

February 3, 2017 தண்டோரா குழு

சென்னை அருகே கடலில் விபத்தை ஏற்படுத்தி கடல் நீரை மாசுப்படுத்திய டான் காஞ்சிபுரம் கப்பல் மீது மீஞ்சூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, எண்ணூர் துறைமுகம் அருகே ஜனவரி 28-ம் தேதி இரு கடல் மைல் தொலைவில் இந்தியாவை சேர்ந்த டான் காஞ்சிபுரம் என்ற சரக்கு கப்பலும், இங்கிலாந்தை சேர்ந்த எம்.டி.பி.டபிள்யூ. மார்பிள் என்ற சரக்குக் கப்பலும் மோதிக்கொண்டன.

துறைமுகத்திற்குள்ளே டான் காஞ்சிபுரம் கப்பல் நுழைய முற்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தினால் டான் காஞ்சிபுரம் கப்பலில் ஏற்றி வரப்பட்ட கச்சா எண்ணெய் சிதறி, கடலில் கலந்தது. இதனால் 2௦ கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடல் நீர் மாசடைந்து பல கடல் வாழ் உயிரினங்கள் பலியாயின. இதனையடுத்து கடலில் கலந்த கச்சா எண்ணெயைக் கரை ஒதுக்கி, அவற்றை அகற்றும் பணி 6 வது நாளாக வெள்ளிக்கிழமை தொடர்ந்து 6வது நாளாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், எண்ணூர் துறைமுகத்தின் பொதுமேலாளர் குப்தா அளித்த புகாரின் பேரில்,

டான் காஞ்சிபுரம் கப்பல் மீது மீஞ்சூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். “ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்தை ஏற்படுத்தி, கடல் நீரை மாசுபடுத்தியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க