• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 7,500 நிவாரணம் வழங்கு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

June 16, 2020 தண்டோரா குழு

கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி அகில இந்திய எதிர்ப்பு தினத்தை அனுசரிக்க சிபிஎம் மத்தியகுழு அறைகூவல் விடுத்தது. இதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டன இயக்கங்களில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக கோவை காந்திபுரம் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார்.

மத்திய அரசு சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு நிபந்தனையற்ற கடன் வழங்க வேண்டும். நூறு நாள் கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும், ஊரடங்கு காலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் மின் கட்டணம் மிக அதிகமாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது மக்களை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு உடனடியாக மின் கணக்கீட்டு குளருபடிகளை சரிசெய்து நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க