• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க பிரதமர் மோடியிடம் கோரிக்கை

April 11, 2020 தண்டோரா குழு

கொரோனா தாக்கம் குறையாததால் ஊரடங்கை நீட்டிக்குமாறு பிரதமரிடம் பல்வேறு மாநில முதல்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவால் 7000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் பலியானோரின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்தது. இந்த நிலையில் இந்தியாவில் லாக்டவுன் ஏப்ரல் 14-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில்,இந்தியாவில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முதல்வர்கள் கோரியுள்ளனர். அது குறித்து ஆலோசனை நடத்த இன்று அனைத்து முதல்வர்களுடனும் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

அப்போது, கொரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க பிரதமர் மோடியிடம் பல மாநில முதல்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க