• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உழவர் சந்தையில் தீவிர வாக்கு சேகரிப்பில் கோவை மநீம வேட்பாளர் மகேந்திரன் !

March 30, 2019 தண்டோரா குழு

கோவை சிங்கநல்லூர் பகுதியில் மக்கள் நீதி மய்ய கோவை வேட்பாளர் டாக்டர் மகேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் முறையாக தற்போது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதியில் தனித்துபோட்டியிடவுள்ளது. அதைபோல் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கடந்த 24ம் தேதி கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

கோவை பாராளுமன்ற தொகுதியில் அக்கட்சியின் சார்பில் மாநில துணை தலைவர் டாக்டர் மகேந்திரன் போட்டியிடவுள்ளார். இதற்காக வேட்புமனு தாக்கல் செய்த அவர் தற்போது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். இந்நிலையில், டாக்டர் மகேந்திரன் இன்று காலை மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்குமாறு கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை, சுங்கம், ஒண்டிப்புத்தூர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இப்பிரச்சாரத்தின் போது கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் டார்ச் லைட் சின்னத்துடம் துண்டு பிரசுரம் விநியோகித்தும் டாக்டர் மகேந்திரனுக்கு வாக்கு சேகரித்தனர்.

மேலும் படிக்க