• Download mobile app
01 Jun 2025, SundayEdition - 3399
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உள்ளாட்சி தேர்தலில் அதிமுவிற்கு ஆதரவு – விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பு

December 23, 2019

கோவையில் நடைபெற்ற அனைத்து விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தமிழக அரசின் எதிர்வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு முழு ஆதரவினை தெரிவித்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவையில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விஸ்வபிரம்ம ஜெகத் குரு சிவசண்முகசுந்தர பாபுஜி சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினராக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுனன் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் தமிழகத்தில் பாரம்பரியமாக தங்க நகை தொழில் செய்யும் விஸ்வகாம சமூக பொற்கொல்லர்கட்கு சில ஆண்டுகளாகவே வேலை வாய்ப்பு நலிவடைந்து உள்ளதை சரி செய்யும் பொருட்டும் , தங்க நகை மொத்த வியாபாரிகள் , நகைக்கடை அதிபர்கள் அனைவரும் எண்பது சதவீத வேலை வாய்ப்பினை உள்ளுர் பொற்கொல்லர்களுக்கு வழங்க , அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ளதை போல தமிழகத்திலும் பாரம்பரிய பொற்கொல்லர்களுக்கு “ தமிழ்நாடு விஸ்வகர்ம கூட்டுறவு இணையம் ” என்ற அமைப்பை உருவாக்கி அதில் நலிவடைந்தவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி கொடுத்து உதவ வேண்டும், தமிழக அரசு மற்றும் மற்றும் அதன் சார்புடைய வங்கிகளில் தங்க நகைகளை மதிப்பீடு செய்ய பாரம்பரிய பொற்கொல்லர்களை நியமிப்பதுடன் , ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு நிரந்தர பணி நியமன ஆணை பிறப்பிக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் கள் ரமேஷ்,திருக்குமார் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விஸ்வகர்மா சமூக மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க