• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உள்மாவட்டங்களில் கோடை மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்

May 3, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு உள்மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“தமிழகத்தின் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலிருந்து காற்று வீசுகிறது. உள்மாவட்டங்களை பொறுத்த வரை மேற்கு திசை காற்றின் வேகம் குறைந்துள்ளது.

இதனால் தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் வெப்பநிலை இயல்பிலிருந்து, 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. உள்மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக பதிவாகியுள்ளது. இது அடுத்த 3 நாட்களுக்கு தொடரும்.

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. பேச்சிப்பாறை, செங்கோட்டையில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.அடுத்த 2 நாட்களுக்கு உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்த வரை மழைக்கு வாய்ப்பில்லை.”

இவ்வாறு பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க