• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உள்புகார் குழு அமைக்கப்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – ஆட்சியர் எச்சரிக்கை

September 23, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகளை தடுப்பதற்காக மத்திய அரசால், பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை தடை சட்டம் 2013 ஆண்டு நடை முறைபடுத்தப்பட்டது. இச்சட்டத்தில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அனைத்து அரசுதுறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அமைக்கப்பட வேண்டும்.

அவ்வாறு அமைக்கப்படும் விசாரணைக் குழுவின் தலைவராக ஒரு பெண் அலுவலரை நியமிக்க வேண்டும். இரண்டு நபர்களை உறுப்பினர்களாகவும், இத்துறையில் நன்கு பழக்கமான ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினை உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும் எனவும் விசாரணைக்கான வழிமுறைகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு அரசுதுறைகள், அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், அரசு தொழிற்சாலைகள், அரசு பயிற்சி நிறுவனங்கள் மற்றும் ஒவ்வொரு தனியார் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறு, குறு நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள், விற்பனைக்கடைகள், தனியார் பள்ளிகள், தனியார் கல்லூரிகள், துணிக்கடைகள், நகைக்கடைகள் இதர விற்பனைக்கடைகள் மற்றும் 10 பெண்களுக்கு மேல் பணியாற்றும் அனைத்து இடங்களிலும் தலைமை அலுவலகங்களில் கட்டாயம் உள்புகார்குழு அமைக்கப்பட வேண்டும்.

அனைத்து தலைமை அலுவலகங்களிலும் உடனடியாக புகார் குழு அமைத்து அதன் விபரத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும். உள்புகார் குழு அமைக்கப்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க