• Download mobile app
17 Jan 2026, SaturdayEdition - 3629
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக சாதனை படைக்க முயற்சி செய்தவர்க்கு தடை

April 11, 2017 தண்டோரா குழு

உயரமான சைக்கிள் ஓட்டி புதிய கின்னஸ் உலக சாதனை படைக்க முயற்சி செய்த நபரை முறையான அனுமதி பெறாத காரணத்தால் கியூபா நகரின் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

கியூபா நாட்டை சேர்ந்த பெலிக்ஸ் குய்ரோலா(53) என்பவர் 7.5 மீட்டர் உயரமுடைய சைக்கிளை கியூபா நாட்டின் தலைநகர் கட்டடம் மற்றும் பிரபல சரடோகா விடுதி அமைந்துள்ள இடத்தில் சைக்கிள் ஓட்ட திட்டமிட்டிருந்தார்.

அவருடைய இந்த சாகசத்தை பார்க்க பார்வையாளர்கள் மற்றும் அவருடைய உலக சாதனை முயற்சியை சரிபார்க்க கின்னஸ் அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்திருந்தனர். ஆனால், காவல்துறையினரிடமிருந்து முறையான அனுமதி வாங்கவில்லை என்று கூறி, அவருடைய சாதனைக்கு காவல்துறையினர் தடை விதித்தனர்.

மேலும்,கின்னஸ் சாதனை புத்தகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 அடி உயரம் கொண்ட சைக்கிள் பயணமே இதுவரை சாதனையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க