• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக இருதய தினத்தை முன்னிட்டு பி.எஸ்.ஜி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த இருதய மையம் துவக்கம்

September 29, 2021 தண்டோரா குழு

உலக இருதய தினத்தை முன்னிட்டு, கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனையில்
இருதயத் துறை சார்பில் பியர்ல் கிளினிக் எனும் இருதயத்திற்கான ஒருங்கிணைந்த மையம் துவக்க விழா இன்று காலை கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனை அரங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் டாக்டர் ராமமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். மருத்துவமனை இருதயத்துறை துறைத் தலைவர் டாக்டர் ஜி. ராஜேந்திரன் புதிய பியர்ல் கிளினிக் குறித்து பேசினார். பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமை உரையாற்றி, புதிய கிளின்க்கை துவக்கி வைத்தார்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா துணை பொது மேலாளர் திலீப் சிங் யாதவ், பஜாஜ் பின்சர்வ் தேசிய விற்பனை மேலாளர் சுனீஷ் சுப்பிரமணியன், பி.எஸ்.ஜி சிறப்பு மருத்துவமனை இயக்குனர் ஜே.எஸ். புவனேஸ்வரன்,பி.எஸ்.ஜி மருத்துவமனை முதல்வர் சுபா ராவ், மத்திய அதிரடிப் படை துணை கமாண்டன்ட் மருத்து அதிகாரி அனுத்தமா பிரதீப்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இறுதியில் பி.எஸ்.ஜி மருத்துவமனை உணவுத்துறை தலைவர் கவிதா நன்றியுரை ஆற்றினார்.

மேலும் படிக்க