• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக இருதய தினத்தை முன்னிட்டு பி.எஸ்.ஜி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த இருதய மையம் துவக்கம்

September 29, 2021 தண்டோரா குழு

உலக இருதய தினத்தை முன்னிட்டு, கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனையில்
இருதயத் துறை சார்பில் பியர்ல் கிளினிக் எனும் இருதயத்திற்கான ஒருங்கிணைந்த மையம் துவக்க விழா இன்று காலை கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனை அரங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் டாக்டர் ராமமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். மருத்துவமனை இருதயத்துறை துறைத் தலைவர் டாக்டர் ஜி. ராஜேந்திரன் புதிய பியர்ல் கிளினிக் குறித்து பேசினார். பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமை உரையாற்றி, புதிய கிளின்க்கை துவக்கி வைத்தார்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா துணை பொது மேலாளர் திலீப் சிங் யாதவ், பஜாஜ் பின்சர்வ் தேசிய விற்பனை மேலாளர் சுனீஷ் சுப்பிரமணியன், பி.எஸ்.ஜி சிறப்பு மருத்துவமனை இயக்குனர் ஜே.எஸ். புவனேஸ்வரன்,பி.எஸ்.ஜி மருத்துவமனை முதல்வர் சுபா ராவ், மத்திய அதிரடிப் படை துணை கமாண்டன்ட் மருத்து அதிகாரி அனுத்தமா பிரதீப்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இறுதியில் பி.எஸ்.ஜி மருத்துவமனை உணவுத்துறை தலைவர் கவிதா நன்றியுரை ஆற்றினார்.

மேலும் படிக்க