• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலகின் அதிக வயதான பெண்மணி எம்மா காலமானார்

April 17, 2017 தண்டோரா குழு

1800களில் இத்தாலி நாட்டில் பிறந்தவரும் உலகிலேயே அதிக வயதுடைய பெண்மணி என்று கருதப்பட்ட எம்மா மொரானோ(117) கடந்த சனிக்கிழமை(ஏப்ரல் 16) மதியம் அவருடைய வீட்டில் காலமானார்.

1899ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி எம்மா பிறந்தார். எம்மாவின் பெற்றோரின் 8 குழந்தைகளில் மூத்த மகள் ஆவார். 1926ம் ஆண்டு கியோவானி மார்டினுசி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். 1937ம் ஆண்டு அவர்களுக்கு ஒரு அழகிய ஆண் மகன் பிறந்தான். ஆனால் பிறந்த சில மாதத்திற்குள் அந்த குழந்தை இறந்துவிட்டது. அடுத்த ஆண்டே அவருடைய கணவரை பிரிந்தார். ஆனால் விவாகரத்து செய்யவில்லை.

கணவரை பிரிந்த அவர் ஒரு சணல் தொழிற்சாலையிலும் போர்டிங் பள்ளியின் சமையலறையிலும் பணிபுரிந்த அவர், தனது 75வது வயதில் ஓய்வு பெற்றார். அவருடைய சகோதர சகோதரிகள் அவருக்கு முன் இறந்துவிட்டனர்.

எம்மா உயிருடன் இருந்தபோது அளித்த பேட்டியில்,

“காலை உணவிற்கு தண்ணீர் அல்லது பாலோடு பிஸ்கட் சாப்பிடுவேன். சிறிது நேரத்திற்கு பிறகு, என்னுடைய 2௦வது வயதில் மருத்துவர்கள் கொடுத்த ஆலோசனைபடி,பச்சை முட்டை ஒன்றையும் சமைத்த முட்டை ஒன்றையும் சாப்பிடுவேன். மதிய உணவிற்கு பாஸ்தா மற்றும் கொத்து கறி சாப்பிடுவேன். இரவு ஒரு டம்பளர் பால் மட்டும் குடிப்பேன். தூக்கம் மிகவும் அவசியம் என்பதால் இரவு 7 மணிக்கு முன் தூங்கச் சென்று காலை 6 மணிக்கு முன் எழுந்துவிடுவேன். இது தான் என்னுடைய நீண்ட நாள் வாழ்க்கைக்கு ரகசியம்” என்று தெரிவித்திருந்தார்.

அவருடைய மருத்துவர் டாக்டர் கார்லோ பாவா கூறுகையில்,

“வட இத்தாலியின் வெர்பானியா நகரிலுள்ள அவருடைய வீட்டின் ஆடும் நாற்காலியில் அமர்ந்தவாறு உயிரிழந்தார். அவர் அதிக கஷ்டப்படாமல் அமைதியான முறையில் காலமானார்” என்றார்.

மேலும் இரண்டு உலகப்போர்களை பார்த்துள்ள எம்மா மொரானோ, ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க