• Download mobile app
01 Jun 2025, SundayEdition - 3399
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலகத்தில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெறமால் தடுக்க கோவையில் மகா பிரபஞ்ச யாகம்

December 23, 2019

பலநூறாண்டுகளிக்கு பிறகு தனுசு ராசியில் 6 கிரகங்கள் ஒன்று இணைவதால், உலகத்தில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெறமால் தடுக்க கரூர் சணப்பிரட்டி எஸ்.ஆர்.எம் மஹாலில், மகா பிரபஞ்ச யாகம் வரும் டிசம்பர் 25ம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஜோதிடர் தினேஷ் கூறுகையில்,

6 கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் சேர உள்ளது. எனவே மக்கள் மத்தியில் அமைதியின்மை, கஷ்டம், நாடு அமைதியில்லாத சூழல் ஏற்படும்.மன்னர் ஆட்சி காலத்தில் மக்கள் நலன் வேண்டி தொடர்ந்து யாகங்கள் நடத்தப்படும். இப்போது அது நடைமுறையில்லாமல் உள்ளது. எனவே உலக நலன் வேண்டி, தமிழகத்தின் மையப்பகுதியாக உள்ள கரூரில் யாகத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

ஜோதிட பிரபஞ்ச குழு நடத்தும் இந்த யாகத்திற்கு பாரதிய ஹிந்து பரிவார் அமைப்பு ஆலோசனைகளை வழங்கி இணைந்து நடத்த ஆதரவு அளித்துள்ளனர். சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யாகத்தில் பங்கேற்க உள்ளனர் என்றனர். பேட்டியின் போது பாரதிய ஹிந்து பரிவார் அமைப்பு நிர்வாகிகள் டாக்டர் முத்துசாமி, லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க