• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உயிர் இருக்கும் வரை பாஜகவில்தான் இருப்பேன் – தமிழிசை

January 31, 2018 தண்டோரா குழு

பாஜகவை விட்டு விலகுவதாக வரும் தகவல் அவதூறானது; உயிர் இருக்கும் வரை பாஜகவில்தான் இருப்பேன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுபவர்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்களை வழங்கும் முறையை, தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை,

“தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து தான் விலக உள்ளதாக பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை. எனது வளர்ச்சி பிடிக்காமல் சிலர் தான் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தேவையற்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். எஸ்.வி.சேகர், எச்.ராஜா மீது எந்த அதிருப்தியும் இல்லை; பாஜக தலைமைக்கு எந்த கடிதத்தையும் நான் அனுப்பவில்லை.கட்சி பலமடைந்து விடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர்”.இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் படிக்க