• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உத்தர பிரதேசத்தில் புல்பூர் எம்.பி.தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக தோல்வி

March 14, 2018 தண்டோரா குழு

உத்திரப்பிரதேச மாநில இடைத்தேர்தலில் முதல்வர் ஆதித்யனாத், 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்ற புல்பூர் கோட்டையில் பாஜக வேட்பாளர் படுதோல்வியடைந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூர், புல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதல்வர், மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றனர்.இந்நிலையில்  காலியாக உள்ள இந்த இரு தொகுதிகளுக்கும் சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில், யோகி ஆதித்யநாத்தின் கோட்டையான புல்பூர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளர்  கவுஷ்லேந்திர சிங் படேல் படுதோல்வி யடைந்துள்ளார். இந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் 59 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளார்.

இத்தொகுதியில் ஆதித்யநாத் 1995, 1999, 2004, 2009, 2014 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க