• Download mobile app
18 Oct 2025, SaturdayEdition - 3538
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உத்தரபிரதேசத்தில் யோகா தற்காப்பு கலைகள் கட்டாயம் – முதல்வர் உத்தரவு

April 5, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேச மாநில பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று முதல்வர் யோகி ஆதித்தநாத் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, யோகாவை கட்டாயமாக்க யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார். இதேபோல், பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு, முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க