• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உதவி பேராசிரியார் சான்றிதழ்களை தனியார் கல்லூரி ஒப்படைக்க வேண்டும் – நீதிபதி உத்தரவு

September 17, 2021 தண்டோரா குழு

கோவை நவாவூர் மருதாபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்.இவரது மனைவி கிருஷ்ணவேணி (42). இவர் தெலுங்குபாளையத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்தார்.

இந்த நிலையில் அவருக்கு அரசு பணி கிடைத்ததை தொடர்ந்து அந்த கல்லூரியில் இருந்து விலகினார்.பின்னர் தனது அசல் பட்ட படிப்பு சான்றிதழ்களை தரும்படி அந்த கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டார். ஆனால் கல்லூரி நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கிருஷ்ணவேணி தனது அசல் சான்றிதழ்களை வழங்கக்கோரி கோவை மாவட்ட நிரந்த மக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், நீதிபதியுமான உமா ராணி, வரும்27-ந் தேதிக்குள் தனியார் நர்சிங் கல்லூரி நிர்வாகம், கிருஷ்ணவேணியின் அசல் சான்றிதழ்களை நிரந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மேலும் ரூ.25 ஆயிரம் அபராத தொகையினை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் படிக்க