• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உதகை: ஊதிய உயர்வை அமுல்படுத்த கோரி அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்

May 30, 2018 தண்டோரா குழு

உதகையில் ஊதிய உயர்வை அமுல்படுத்த கோரி அஞ்சல் ஊழியர்கள் திருவோடு எடுத்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் இன்று(மே 30)ஈடுபட்டனர்.

கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடெங்கும் பல்வேறு போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றது.இதன் ஒரு பகுதியாக உதகையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சல் ஊழியர்கள் 9 ஆவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் 7 வது ஊதிய குழு கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மேலும்,கடந்த 8 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தின் 9 வது நாளான இன்று நீலகிரியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் தபால் அலுவலகம் முன்பு திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க