• Download mobile app
09 Jul 2025, WednesdayEdition - 3437
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உதகையில் நடிகர் விவேக்கை முற்றுகையிட்ட பொதுமக்கள்

June 5, 2018 தண்டோரா குழு

நீலகிரி மாவட்டத்தில் உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா பல பகுதிகளில் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

உதகையில் உள்ள ஆலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரம் நடும் விழாவில் பங்கேற்றார்.இதனையடுத்து குப்பைகள் சுத்தம் செய்யும் நிகழ்ச்சிக்காக உதகை காந்தள் பகுதியில் உள்ள கஸ்தூரி பாய் காலனிக்கு சென்றார்.அங்கு நிகழ்ச்சியை துவக்கி வைக்க இருந்த நிலையில் அப்பகுதி மக்கள் நடிகர் விவேக்கை முற்றுகையிட்டனர்.

தங்கள் பகுதியில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் நாங்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும், கழிப்பறை வசதிகள் ஏதும் சரிவர பராமரிப்பது இல்லை என நடிகர் விவேக்கிடம் கோரிக்கை வைத்தனர்.இதை சற்றும் எதிர்பாராத விவேக் தான் எந்த விதமான அரசியல் கட்சியை சாராதவன்,ஐயா அப்துல்கலாம் பணியில் சமூக பணிகளை மேற்கொள்பவன் அதனால் உங்கள் பிரச்சனைகளை இங்கு உள்ள அரசியல்வாதிகளிடம் கூறுங்கள் என நகைச்சுவை பாணியில் பதிலளித்தார்.இதனையடுத்து அப்பகுதி மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

மேலும் படிக்க