கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:
உணவகங்களில் பொதுமக்களாகிய நுகர்வோருக்கு வழங்கப்படும் சேவையின் மீது நுகர்வோரின் விருப்பமின்றி சேவை வரி விதிப்பது, நுகர்வோரின் உரிமைக்கு எதிரானதாகவோ அல்லது முறையற்ற வணிகமாகவோ கருதப்படும். நுகர்வோரின் நலன் காக்கும் வகையில் இவ்வரியானது முற்றிலும் நுகர்வோர் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே வசூலிக்க இயலும்.
எனவே கோவை மாவட்டத்தில் உள்ள உணவக உரிமையாளர்கள் தங்களது உணவகங்களுக்கு வரும் பொதுமக்களிடம் சேவை வரியினை வசூலிக்கக் கூடாது. அவ்வாறு சேவை வரி வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பிற்கு உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்படும். ஏதேனும் உணவகங்களில் சேவை வரி வசூலிக்கப்பட்டால் பொதுமக்கள் தங்களது புகாரை மனுவாக எழுதியோ அல்லது 0422-2300569 என்ற தொலைபேசி மூலமோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்