• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உடல்நலகுறைவால் ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்ட சட்டபேரவை ஊழியர்

February 18, 2017 தண்டோரா குழு

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நம்பிக்கை வாக்கு கோருவதற்கான சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்றபோது, சட்டப் பேரவை ஊழியருக்கு திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடனே, அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

முதல்வர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் சட்டப் பேரவைக் கூட்டத்தில் ஆரம்பம் முதல் அமளி நடைபெற்றது. வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பினரும் திமுகவினரும் வலியுறுத்தினர். ரகசிய வாக்கெடுப்பையும் வேறொரு நாளில் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். அதற்கு சட்டப் பேரவைத் தலைவர் தனபால் மறுத்தார்.

இதையடுத்து, பேரவைத் தலைவரின் இருக்கையைச் சுற்றி திமுகவினர் முற்றுகையிட்டனர். அப்போது, அவரது இருக்கையும் மைக்கும் சேதப்படுத்தப்பட்டன. இதற்கிடையில், சட்டப்பேரவை வளாகத்திற்குள் இருந்த ஊழியர் பாலாஜி திடீரென்று உடல்நலக் குறைவுக்கு ஆளானார். அதையடுத்து ஆம்புலன்ஸ் அங்கு வந்தது. அப்போது, வளாகத்தில் இருந்து சட்டப் பேரவை ஊழியர் பாலாஜியை சக ஊழியர்கள் வெளியே தூக்கி வந்தனர். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இதனால், சட்டப்பேரவை வாளகத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க