• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் பலி

March 1, 2022 தண்டோரா குழு

உக்ரைன் நாட்டின் கார்கீவ் நகரில் இன்று காலை நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி இந்திய மாணவர்ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கார்கீவ் நகரில் ரஷ்யா ராணுவம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.இதில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்ற நான்காம் ஆண்டு மருத்துவம் படித்த மாணவர் நகரில் இருந்து தப்பிக்க ரயில் நிலையம் செல்ல முற்பட்டபோது வெடிகுண்டில் சிக்கி உயிரிழந்தார்.

போர் நடைபெறுவதால் உயிரிழந்த நவீன் உடலை உடனே எடுத்து வருவது சற்று சிரமம்.தகுந்த சூழல் வரும் போது நிச்சயம் உயிரிழந்த மாணவனின் உடலை பத்திரப்படுத்தி இந்தியாவிற்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் நவீனின் குடும்பத்தாரிடம் கூறியுள்ளனர்.

உக்ரைனின் கார்கீவ் நகரில் கர்நாடக மாணவர் நவீன் தாக்குதலில் சிக்கி கொல்லப்பட்டுள்ளார். அதே நகரில் இன்னும் 728 தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் சிக்கி உள்ளனர்.காலையில் வெடிகுண்டு வீசி தகர்க்கப்பட்ட அரசு கட்டிடத்தில் இருந்து 2கிமீ தூரத்தில் 200 தமிழ் மாணவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க