• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்கடம் பெரியகுளத்தில் 12 அடி மதில் சுவர் மழை காரணமாக இடிந்து விழுந்தது

April 15, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் உக்கடம் பெரிய குளத்தில் குய்க்வின் பகுதியில் 1.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.39.74 கோடி மதிப்பீட்டிலும், பேஸ் -1 பகுதியில் 4.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.62 கோடி மதிப்பீட்டிலும் குளத்தினை புணரமைத்து, சீரமைக்கும் பணிகள் நடைபெற்று 100 சதவீதம் பணிகள் நிறைவடைந்தது.

இதில் குளத்தை சுற்றிலும் உள்ள கரைகளை பலப்படுத்தும் பணிகள் முடிந்து, இவற்றில் இயற்கை முறையில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், மிதிவண்டி பாதை அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், சிற்றுண்டி உணவகம் அமைத்தல், மிதக்கும் நடைபாதைகள் அமைத்தல், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட விளையாட்டு தளங்கள் அமைத்தல், பாதசாரிகள் பாதை அமைத்தல், வண்ண விளக்குகள் அமைத்தல், நீர்வழிப்பாதை மேம்படுத்துதல், குளத்திலுள்ள ஆகாயத்தாமரை அப்புறப்படுத்துதல் ஆகிய முடிந்தது.

இதனிடையே கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக உக்கடம் பெரிய குளம் திறக்கப்பட்டது.இதனிடையே உக்கடம் பெரிய குளத்தின் கரும்புக்கடை அருகே சேரன் நகர் பகுதியில் உள்ள குளக்கரையில் சுமார் 12 அடி உயரம், 50 அடி நீளம் மதில் சுவர் அமைக்கப்படிருந்தது.

இந்நிலையில் கோவையில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெயத்தது. இதில் இந்த மதில் சுவர் இடிந்து விழுந்தது. இன்று அதிகாலை மூன்று மணி அளவில் சுவர் விழுந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் உயிர் இழப்பு ஏற்படவில்லை.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘கோவை உக்கடம் பெரியகுளத்தில் மதில் சுவர் அமைக்கப்பட்டிருந்தது.இது இடிந்தது தொடர்பாக விசாரனை நடைபெறும்,” என்றனர்.

மேலும் படிக்க