• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்கடம் கழிவுநீர் பண்ணையில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

March 17, 2021 தண்டோரா குழு

கோவை உக்கடம் கழிவுநீர் பண்ணையில் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பாதாள சாக்கடை கழிவுநீரை சுத்திகரிக்க உக்கடம், ஒண்டிப்புதூர், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதிகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டது.இதில், மாநகராட்சி தெற்கு மண்டலம் 86-வது வார்டில் உக்கடம் கழிவுநீர் பண்ணை வளாகத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, அன்றாடம் சுமார் 3 கோடி லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

உக்கடம் பகுதியில் கழிவுநீர் பண்ணையில் கழிவு நீர் லாரிகள் மூலமாக தினசரி கொட்டப்படுகிறது. இந்த பண்ணையில் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,

‘‘ உக்கடம் கழிவுநீர் பண்ணையில் கழிவு நீர் முறையாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறதா? எனவும் அதன் செயல்பாடுகள் குறித்தும் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு வழக்கமான ஒன்று தான்,’’ என்றனர்.

மேலும் படிக்க