• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உக்கடம் – ஆத்துப்பாலம் சாலையில் போக்குவரத்தில் மீண்டும் மாற்றம்

November 21, 2020 தண்டோரா குழு

கோவை உக்கடம் ஆத்துப்பாலம்
இரண்டாம் கட்ட பணிகள் துவங்க உள்ளதால் மீண்டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை உக்கடம் ஆத்துப்பாலம் இடையே மேம்பால பணிகள் நடந்துவருகின்றன. பொள்ளாச்சி உடுமலை பழனி கேரளா செல்லும் பஸ்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.மாநகருக்குள் இருந்து குனியமுத்தூர் சுந்தராபுரம் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டு இருந்தன.

இந்தநிலையில் கடந்த மாதம் வாகன ஓட்டிகளின் கோரிக்கையை ஏற்று உக்கடம் ஆத்துப்பாலம் பாலம் பணிகள் நடந்து வரும் பகுதியில் ரோடு அமைக்கப்பட்டு இரு, நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.இப்பாதையில் பொள்ளாச்சி வழியாக பஸ்கள் டவுன் பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு போக்குவரத்து போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஆத்துப்பாலம் பகுதியில் விரைவில் மேம்பால பணிகள் துவங்க உள்ளதால் மீண்டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு தெரிவித்தார்.

மேலும் படிக்க