• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்கடம் அல்அமீன் காலனியில் 17 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

January 30, 2021 தண்டோரா குழு

கோவை உக்கடம் அல்அமீன் காலனியில் 17 ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 86 ஆவது வார்டுக்கு உள்பட்ட அல் அமீன் காலனியில், 50 ஆண்டுகளுக்கு மேலாக மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 26 குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வந்தனர். இந்த 26 குடும்பத்தினருக்கும் செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. ஆயினும், அமீன் காலனியில் உள்ள வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து செல்ல மறுத்து விட்டனர்.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியனின் உத்தரவுப் படி, சில நாள்கள் முன்பு அங்குள்ள வீடுகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு 9 வீடுகள் இடித்து
அகற்றப்பட்டன. அங்கு வசித்தவர்கள், செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறினர்.

இந்நிலையில், மீதமுள்ள 17 வீடுகளைச் சேர்ந்தவர்களும் அல் அமீன் காலனியில் வசித்த வீடுகளை கடந்த வாரம் காலி செய்து அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்றனர். இதையடுத்து, மாநகராட்சி ஆணையரின் உத்தரவுப்படி, நகரமைப்பு அலுவலர்( திட்டம்) ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று 17 வீடுகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக இடித்து அகற்றினர்.

மேலும் படிக்க