• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உக்கடம் அல்அமீன் காலனியில் 17 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

January 30, 2021 தண்டோரா குழு

கோவை உக்கடம் அல்அமீன் காலனியில் 17 ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 86 ஆவது வார்டுக்கு உள்பட்ட அல் அமீன் காலனியில், 50 ஆண்டுகளுக்கு மேலாக மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 26 குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வந்தனர். இந்த 26 குடும்பத்தினருக்கும் செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. ஆயினும், அமீன் காலனியில் உள்ள வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து செல்ல மறுத்து விட்டனர்.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியனின் உத்தரவுப் படி, சில நாள்கள் முன்பு அங்குள்ள வீடுகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு 9 வீடுகள் இடித்து
அகற்றப்பட்டன. அங்கு வசித்தவர்கள், செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறினர்.

இந்நிலையில், மீதமுள்ள 17 வீடுகளைச் சேர்ந்தவர்களும் அல் அமீன் காலனியில் வசித்த வீடுகளை கடந்த வாரம் காலி செய்து அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்றனர். இதையடுத்து, மாநகராட்சி ஆணையரின் உத்தரவுப்படி, நகரமைப்பு அலுவலர்( திட்டம்) ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று 17 வீடுகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக இடித்து அகற்றினர்.

மேலும் படிக்க