• Download mobile app
29 Oct 2025, WednesdayEdition - 3549
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூன்று நாள் பயணமாக இஸ்ரேல் கிளம்பினார் பிரதமர் மோடி

July 4, 2017 தண்டோரா குழு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி,மூன்று நாள் அரசு முறை பயணமாக இன்று இஸ்ரேல் செல்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக இன்று இஸ்ரேல் நாட்டுக்கு சென்றுள்ளார். இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் தூதரக உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் நிறைவையொட்டி அதன் நினைவாக இந்த பயணம் அமைகிறது.

இஸ்ரேலில் அந்நாட்டு பிரதமர் மற்றும் அதிபர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.இச்சந்திப்பின் போது இரு நாட்டு மக்களிடையே தொடர்புகளை ஏற்படுத்துவது, விமான போக்குவரத்து, முதலீடு ஆகியவைகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.

மேலும்,இஸ்ரேல் வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்ற உள்ள மோடி, ஹைபாவில் உள்ள இந்திய ராணுவ நினைவிடத்தில், அஞ்சலி செலுத்த உள்ளார்.இந்தியப் பிரதமர் ஒருவர் இஸ்ரேல் செல்வது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க