• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இலங்கை மீனவர்கள் தாக்கியதில் 4 தமிழ் மீனவர்கள் காயம்

February 24, 2017 தண்டோரா குழு

கோடியக்கரை பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் அவர்களைத் தாக்கியுள்ளனர். அதில் 4 தமிழக மீனவர்களுக்குப் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

பாம்பன் நாட்டுப் படகு சங்கத் தலைவர் எஸ். அருள் கூறுகையில், “முதலில், கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு தமிழக மீனவர்களை மிரட்டியுள்ளனர். பிறகு, அவர்களைக் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். அவர்களுடைய வலைகள், உபகரணங்கள், கைபேசி, வாக்கி-டாக்கி சாதனம் ஆகியவற்றை எடுத்துச் சென்றுவிட்டனர்.

மீன் பிடிப்பதற்காக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 24) காலையில் பாம்பனில் இருந்து கடலுக்குள் 7 பேர் அடங்கிய குழுவில் ஒரு பகுதியாக அவர்கள் சென்றனர். மற்றவர்கள் பத்திரமாகத் திரும்பி வந்தனர்.

படுகாயமடைந்த 4 மீனவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். மருத்துவர்கள் அவர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர்” என்றார்.

மேலும் படிக்க