• Download mobile app
29 Oct 2025, WednesdayEdition - 3549
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலங்கை சட்டத்திருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவிக்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்

July 7, 2017 தண்டோரா குழு

இலங்கையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்தால் 2 ஆண்டு சிறை, ரூ.50000 அபராதம் விதிக்கப்படும் என்று இலங்கையின் புதிய சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபாய் மதிப்பில் 10-50 லட்சம் வரை அபராதம் விதித்து சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த புதிய மசோதாவை ஏற்க முடியாது.இது இந்திய மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இலங்கை மசோதா, தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும். எனவே இந்தியா சார்பில் பிரதமர் மோடி இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். புதிய மசோதா, மீனவர் பிரச்சினையை தீர்க்கும் நடவடிக்கைக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று கடித்தில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க