• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இலங்கை கடற்படையினர் தாக்குதலில் தமிழக மீனவர் ஒருவர் பலி

March 7, 2017 தண்டோரா குழு

இந்திய-தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை இரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்தார்.

ராமேசுவரம் மாவட்டத்திலிருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப் படகுகளில் மீன்பிடிக்க திங்கட்கிழமை இரவு கடலுக்குச் சென்றனர். அவர்கள் இந்தியா-இலங்கை கடல் எல்லை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர் எனக் கூறப்படுகிறது.

இரவு நேரத்தில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடிக்க முயற்சி செய்துள்ளனர்.

இது குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், “எங்கள் மீது வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் விரட்டியடித்தனர். எல்லைப் பகுதியை மீறி செல்லவில்லை. ஆனாலும் அவர்கள் நம் நாட்டு எல்லைக்குள் வந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்” என்றார்.

இந்த தாக்குதலில் ராமேஸ்வரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற 21 வயது வாலிபர் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதனால் மீனவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவசர அவசரமாகக் கரைக்குத் திரும்பினர்.

இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவரின் உடலை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்வையிட்டார். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது சர்வதேச நீதிமன்றத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க