• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்’ – கோ-ஆப்டெக்ஸ்

March 1, 2017 தண்டோரா குழு

கோவை மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்ப நிலையத்தில் ‘இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்’ என்ற சிறப்பு விற்பனையை கோ-ஆப்டெக்ஸ் தலைவர் மனோகரன் முன்னிலையில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ‘இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்’ என்ற சிறப்பு விற்பனையை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் கைக்குட்டை முதல் பட்டுப் புடவை வரை அனைத்து ரகங்களுக்கும் பொருந்தும்.

இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டுப் புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள் கைவண்ணத்தில் உருவான பருத்திச் சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு வகைகள் பருத்தி சட்டைகள், ஸ்லப் சட்டைகள் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக கோ-ஆப்டெகஸில் தருவிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு இத்திட்டத்தின் கீழ் கோவை மண்டலத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ. 257.98 இலட்சம் மதிப்புக்கு ஆடைகள் விற்பனை செய்யப்பட்டன. தற்போது ரூ.350 இலட்சம் அளவுக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர் ராஜா, கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சுரேஷ்குமார் , கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க