• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரண்டு குழந்தைகளை கொன்ற செவிலித்தாய்க்கு ஆயுள் தண்டனை

May 15, 2018 தண்டோரா குழு

நியூயார்க் நகரில் இரண்டு குழந்தைகளை கழுத்து அருத்து துன்புறுத்திக் கொன்ற செவிலித்தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார் மெரினா கிரீம். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளது தனது குழந்தைகளை பார்த்து கொள்ள ஒரு செவிலித்தாயை வேலைக்கு வைத்துள்ளார். ஒரு நாள் மரினா கிரீம் தனது முன்றாவது குழந்தையுடன் வெளியில் சென்றுள்ளார். அப்போது அந்த நேரத்தில் மரினா வின் இரண்டு குழந்தையையும் கவனிக்கும் பொறுப்பு ஒர்டேகா விடம் ஒப்படைத்து சென்றாள்.

மெரினா வெளியே சென்ற சிறிது நேரத்தில் ஒர்டேகா மெரினாவின் ஆறு வயது குழந்தை லுசியாவையும் இரண்டு வயது குழந்தை லியோவையும் சமையல் அறையில் இருக்கும் கத்தியால் இருவரையும் கழுத்து அறுத்து கொலை செய்துயுள்ளார்.

மெரினா தனது குழந்தைகளை நடன வகுப்புக்கு இன்னும் அழைத்துச்செல்லவில்லை என்பதை
அறிந்து வீடு திரும்பினார்.விட்டிற்குள் வந்த மெரினா தனது இரண்டு குழந்தையும் குழியல் அறையில் உள்ள தொட்டியில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததுயுள்ளார்.

இந்த சம்பவம் 2012 ஆக்டோபரில் 25-ஆம் நடந்தது. அதனை தொடர்ந்த வழக்கு விசாரணை தற்போது முடிவுக்கு வந்தது. ஆனால் ஒர்டேகாவின் வழக்கறிஞர்கள் அவரை காப்பாற்ற அவர் மனநலை பாதிக்கப்பட்டிருப்பதாக அவருக்கு தண்டனை வழங்க கூடாது என வாதாடினார்கள்.

ஆனால் விசாரணையின் முடிவில் ஒர்டேகா குற்றவாளி என நிருபிக்கபட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது .

மேலும் படிக்க