• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரண்டாம் உலக தமிழாய்வு மாநாடு மற்றும் இசைத்தமிழ் ஆய்வரங்கம்

December 19, 2020 தண்டோரா குழு

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கெளமார மடாலயம் சார்பில் பேருர் ஆதினம், சிரவை ஆதினம், மற்றும் தமிழாய்வு அறக்கட்டளை சார்பில் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு மற்றும் இசைத்தமிழ் ஆய்வரங்கம் நடைபெறுகிறது. இன்று மற்றும் நாளை நடைபெறும் இந்த நிகழ்வில் தமிழ் இசை தொடர்பான ஆய்வறிஞர்கள் இணையவழி மூலமாக ஆய்வுரை நடத்தினர்.

மேலும் தமிழ் இசை சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இதில் அரியவகை தமிழர் இசை கருவிகள் உட்பட 70 தமிழர் இசைக்கருவிகள் காட்சிபடுத்தபட்டுள்ளன.

இது குறுத்து பேசிய தமிழாய்வு அறக்கட்டளை நிறுவனர் சிவக்குமார்,

இசைத்தமிழ் ஆய்வரங்கில் பாமர இசை, நாட்டுப்புற இசை, தொல்லியம் குறுத்து கலந்தாய்வு நடைபெறுகிறது என்றும் அழிந்து வர கூடிய தமிழர் இசை கலைகள் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இது நடத்தப்படுகின்றது என்று தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய கோசை நகரான் குழுவின் உறுப்பினர் சிவக்குமார்,

வைரஸ் தொற்று காலத்தில் பெரும் சிரமத்திற்கு பிறகு இந்த கண்காட்சி நடைபெறுகிறது என்றும் இந்த வருடம் புதுமையாக ஐம்முக குடவு, யாழ் போன்ற இசைக்கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது என்றும் இங்கு வரும் பார்வையாளர்கள் கருவிகளை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு கருவியை பற்றியும் அறிந்து கொள்ளலாம் என்றும் எவ்வாறு வாசிப்பது என்றும் செய்து காண்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க